ஒரு சாதியின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் சங்கம் பயன்படுமேயானால், அதை நாம் வரவேற்க வேண்டும். கொங்கு வேளாளர்களிடையே முன்னேற்றத்தையும், கொங்கு நாட்டு மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.

Wednesday, 17 April 2013

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை லாபம் தரும் வெண்டை

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை லாபம் தரும் வெண்டை!

தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளித்து பயிர் செய்ய, சூரக்கோட்டை விவசாயி வீரபாண்டியன் கையாண்ட மாற்றுவழிதான் வெண்டை சாகுபடி. அதைக் குறித்த அவரது அனுபவங்கள்:

முதலில் தொழு உரம் போட்டு, நன்றாக உழுது, பின் ஒரு அடி இடைவெளியில் 11/2 அடி அகலத்திற்கு பார் அமைத்து, நீர் பாய்ச்சி, பாரின் ஓரத்தில் ஒரு அடி இடைவெளியில் வெண்டைக்காய் விதைகளை ஊன்றினேன். அரை ஏக்கர் நிலத்திற்கு ஒன்றரை கிலோ விதைகள் தேவைப்படும். A1 ஆந்திரா ரக விதையைத்தான் பயிரிட்டுள்ளேன். விதை விதைத்த 45-ஆம் நாளிலிருந்து அறுவடை செய்யத் துவங்கலாம். தொடர்ந்து 3 மாத காலம்வரை வெண்டை காய்க்கும்.

பயிர்ப் பாதுகாப்பு முறை
பயிர் செழுமையாக வளர்வதற்கு ஒவ்வொரு செடிக்கும் 10 கிராம் வீதம் கலப்பு உரம் இடவேண்டும். அரை ஏக்கர் நிலத்திற்கு மொத்தமாக 3 மூட்டை கலப்பு உரம் தேவைப்படும். பயிரிட்ட 15 நாட்களில் ஒருமுறையும், அதன்பின் மாதம் ஒருமுறையும் இந்தக் கலப்பு உரத்தை செடிகளுக்கு இட்டு வந்தால் பயிர் நன்றாக வளர உதவும், காய்களும் திடமாக இருக்கும்.

நோய்த் தாக்குதால் தென்பட்டால், ஒரு முறை இமேடா நோய் மருந்தை பயிர்களுக்குத் தெளித்து விட்டால், நோய்த் தாக்கு அறவே இருக்காது. தவிர, வாரம் ஒரு முறை செடிகளுக்கு மிதமான நீர் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் செடிகள் பசுமையாக இருக்கும், மகசூலும் பெருகும். அரை ஏக்கரில் வெண்டை பயிர் செய்ய 10 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். 2 நாட்களுக்கு ஒருமுறை 80 கிலோ வெண்டைக் காய்களை அறுவடை செய்து வருகிறேன். ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய் வரை விற்பனை ஆகின்றன. இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 1,000 முதல் 1,200 வரை வருவாய் கிடைக்கிறது.

சந்தை வாய்ப்புகள்
நம் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் நாட்டுக் காய்கறிகளில் ஒன்று இந்த வெண்டை என்பதால், எப்போதும் இதன் தேவை அதிகமாகவே உள்ளது. பெரும்பாலும் தஞ்சையில் உள்ள சந்தையில் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் மூடை மூடையாக வாங்கிச் செல்கின்றனர்.

டிப்ஸ்
வெண்டையை ஊடுபயிராகவும் பயிரிடலாம். மேலும் இதை 2 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து லாபம் பெற முடிவதால், விவசாயிகளின் அன்றாடச் செலவிற்கும் கை கொடுக்கும்" என்று கூறினார். தொடர்புக்கு: 044-2747 4348


Sunday, 14 April 2013

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!!

கட்டாயம் படிக்கவேண்டியதும் பகிர வேண்டியதும்....கட்டாயம் அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை இது! படித்ததும் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!


பன்னெடுங்காலமாக தமிழர், சித்திரை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் நாட்டில், கடந்த தி.மு.க அரசினால் தை முதனாளே வருடப்பிறப்பு என அறிவிக்கப்பட்டபோதும், தற்போதைய அ.தி.மு.க அரசால், சித்திரையே புத்தாண்டு என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக அரசின் உபயத்தில், மலேசியாவில் நெடுநாளாக தையே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் தமிழர் வாழும் பல நாடுகளிலும், தைப்பொங்கலன்றே புத்தாண்டு கொண்டாடப்பட்டு விட்டதாகவும் அறியமுடிகிறது.

இதற்கு, நாம் முதலில் தைப்புத்தாண்டின் பின்னணியை ஆராய்வது தகும்.

சித்திரைக்கு ஆரியப்புத்தாண்டு என்று பெயர்சூட்டி, தை மாதத்தில் ஆரம்பிக்கும் திருவள்ளுவர் ஆண்டை, தமிழர் புத்தாண்டு என அறிமுகம் செய்தது 1971ல் ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு. (கிறிஸ்து ஆண்டு + 31 = திருவள்ளுவராண்டு)
இம்மாற்றத்துக்கான காரணங்களாக அவ்வரசு கூறிய காரணங்கள் என்னென்னெ; அவையெல்லாம் சரிதானா?? ஆராய்வோம்:

1.1921இல், சென்னை பச்சையப்பா கல்லூரியில், மறைமலையடிகள் தலைமையில், 500இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் கூடி எடுத்த முடிவு தான் தைப்புத்தாண்டு!

இது, அப்பட்டமான பொய்யென்று சொல்கிறது, 15.05.1955இல் தமிழ் மறைக்கழகத்தால் வெளியிடப்பட்ட, “திருவள்ளுவர் திருநாள் மலர்” எனும் வெளியீடு.
திருவள்ளுவரின் காலம் கிறிஸ்து காலம் + 31 என மறைமலையடிகள் கணித்தது உண்மைதான். எனினும் தைப்புத்தாண்டு பற்றியோ, திருவள்ளுவர் தினம் தை 1 என்றோ அவர் என்றுமே சொன்னதில்லை. வைகாசி அனுச நட்சத்திரமே திருவள்ளுவர் தினமெனக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதென்பதற்கு மேற்காட்டிய திருவள்ளுவர் தின மலரே ஆதாரம்!

சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் 1935ஆம் ஆண்டு மே மாதம்; 18 மற்றும் 19-ஆம் திகதிகளில், பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது பற்றியும், தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் (அனுசம்) திருவள்ளுவர் தினமாக 1935-இல் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் கஉஅ(128) - கங0 (130) இல் காணலாம்.

1935-இல், உலகெங்கும் திருவள்ளுவர் தினமாக வைகாசி அனுடம் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் .௧௨௮(128) – ௧௩௦ (130) இல் காணலாம். 15.5.1955-இல் தமிழ்மறைக் கழகம், தமிழினத்தை ஒன்று படுத்தும் திருநாள், திருவள்ளுவர் திருநாள். அது வைகாசி அனுடம் என்று திருவள்ளுவர் திருநாள் மலர் வெளியிட்டிருக்கிறது. இதில் ‘தை’யை வள்ளுவர் தினம் என்று சொன்ன கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார் திரு கா.போ.ரத்னம் அவர்கள். வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று உறுதி செய்த தமிழ் அறிஞர் பட்டியல் இம் மலரில் வெளியிடப்பட்டுள்ளது.http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/

இங்கு 1921ஆம் ஆண்டு எங்கே வந்தது? அறிஞர்கள் எப்போது கூடினார்கள்? எப்போது முடிவெடுத்தார்கள்? ஒரு தகவலுமே இல்லையே?
அரசு சாட்டுக் கூறிய 1921இற்கும், தை புத்தாண்டாக அறிவிக்கப்பட்ட 1971இற்கும் இடையில் 50 வருட வித்தியாசம்…. மறைமலையடிகள் உட்பட அந்தக் காலத்தில் இருந்த யாருமே உயிரோடு இருக்கவில்லை என்ற தைரியத்தில், அரசு செய்த மாற்றம் தான் இது…!!!
வைகாசி அனுசத்தில் கொண்டாடப்பட்டு வந்த திருவள்ளுவர் தினம், அறிஞர்களின் கோரிக்கைக்கேற்ப, 1966-ஆம் ஆண்டு முதல், சூன் 2ஆம் திகதி, ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், 1970இல் ஏற்பட்ட திமு.க ஆட்சிமாற்றத்தை அடுத்து, தை முதலாந் திகதிக்கு, மாற்றப்பட்டது என்பது வரலாறு.

ஆக, திருவள்ளுவர் ஆண்டு, தைப்புத்தாண்டு எல்லாமே தமிழறிஞர்களின் முடிவன்று; தனி ஒரு மனிதரின் முடிவு என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது. வீணே மறைமலையடிகளையும், தமிழறிஞர்களையும் வம்புக்கு இழுத்ததுதான் மிச்சம்!

தமிழக அரசையே உலகத்தமிழரின் தலைமை அமைப்பாகக் எண்ணிக்கொண்டிருக்கும் தமிழறிஞர் பலரும் இது யாவற்றையும் உண்மை என்று நம்பியதே இன்னும் வேதனைக்குரிய விடயம்.

2.“தைஇத் திங்கள்”, “தைஇய திங்கள்” முதலான தை மாதம் பற்றிய தகவல்கள், நற்றிணை, புறநானூறு, முதலான சங்க இலக்கியங்களில் உள்ளதால், தையே சங்ககாலத்தில் புத்தாண்டாக இருந்திருக்கிறது. எனவே, தையே புத்தாண்டு!

“தைஇத்திங்கள்”, முதலான் சங்க இலக்கியச் சொற்கள், தை புத்தாண்டு என்றா சொல்கின்றன?
நிச்சயம் இல்லை...ஏன்?

மேற்காட்டியுள்ள உதாரணங்கள் குறிப்பது தைப்புத்தாண்டை அல்ல , சங்ககாலத்தில் தைமாதத்தில் இடம்பெற்ற, “தைநீராடல்” எனும்; நீராடல் விழாவை!

தைநீராடிய தவத்தின் பயனாகச் பெண்களின் விருப்பங்கள் நிறைவேறி, செல்வ வளம் பெருகிக் குடும்ப நலன் சிறப்புறும் என்ற நம்பிக்கை காணப்பட்டதை சங்க இலக்கிய வரிகள் மூலம் அறியமுடிகிறது:

“தைஇத் திங்கள் தண்கயம் போலக்
கொளக்கொளக் குறையாக் கூழுடை வியனகர்.” -புறநானூறு. 70:6-7

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்” - நற்றிணை 80

“நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம்” - ஐங்குறுநூறு 84

“வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையில் நீராடிய தவந்தலைப் படுவையோ” - கலித்தொகை 59:12-13
(தண்கயம் = குளிர்ந்த நீர்நிலை)

இவ்வரிகள் எல்லாவற்றையும் கூர்ந்து அவதானியுங்கள். இவற்றில் எந்த வரியிலாவது தைநீராடலானது, சூரியவழிபாட்டுடன் தொடர்பானது, அல்லது புத்தாண்டுக்குரிய ஆரம்பம் என்பது பற்றி ஒரு சொல்லாவது காணப்படுகின்றதா?

தைநீராடல் பற்றி, பரிபாடல் மிக விரிவாகக் கூறியுள்ளது. பரிபாடல் தரும் விவரங்களைத் தொகுத்துப் பார்த்தால், இந்நோன்பு மார்கழி ஆதிரையன்று தொடங்கி 29 நாள்கள் நடைபெற்று 30ஆவது நாளில் வருகின்ற தைப்பூச நாள் நீராடலுடன் முடிவுற்றிருக்க வேண்டும் எனத் தெரியவருகிறது.

“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை” -பரிபாடல் 11

காலவெள்ளத்தில் அடிபட்டு, சில பண்டிகைகள், நோன்புகள் தம் சுயத்தை இழந்து திரிபதுண்டு. தைநீராடலுக்கும் அதுதான் நிகழ்ந்தது. சங்க காலத்து (கி.மு 3 - கி.பி 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே) தைநீராடல், மணிவாசகர் மற்றும் ஆண்டாள் காலத்தில் (கி.பி 4 - 8 ஆம் நூற்றாண்டுக்கு இடையில்) மார்கழி மாதத்தில் மகளிர் நீராடிக் கொண்டாடும் பாவைநோன்பாக மாறிவிட்டது.
ஆனாலும், தைப்பூசத்தில் முடிந்த தைநீராடலின் எச்சமாக, தைப்பூசம், நெடுங்காலமாக, மகளிர் கொண்டாடும் விழாவாகவே இருந்து வந்ததை,

“நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”

என்ற சம்பந்தர் தேவாரம் (கி.பி 7ஆம் நூற்றாண்டு) மூலம் அறியமுடியும்.
தைநீராடல் - அதுவும் பெண்கள் மட்டும் நோற்ற தைநீராடல் நோன்பு தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது என்று எப்படி சொல்லமுடியும்?

3.பெண்ணுருவெடுத்த நாரதருக்கும், கண்ணனுக்கும் பிறந்த 60 குழந்தைகள் தான் பிரபவ முதலான 60 வருடங்கள் என்று “அபிதான சிந்தாமணி” எனும் நூல் சொல்கிறது. இந்த அசிங்கமான ஆரியக்கதையையும் வடமொழி வருடப் பெயர்களையும் தமிழன் பின்பற்றுவதே அசிங்கம்!

உண்மைதான், ஒரு தமிழனாக நோக்கும்போது, 60 வருடங்களுக்கும் வடமொழிப்பெயர் இருப்பதும், அதற்காக சொல்லப்படும் புராணக் கதையும் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கிறது - உண்மை! ஆனால், இந்தக் கதைக்காக யாரும் புத்தாண்டு கொண்டாடுவதில்லையே!

இந்த வடமொழி வருடக் கணக்கைத் தான் பலநூறு வருடங்களாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் வேறெந்த இனத்தவரிடையேயும், வேறெந்த மாநிலத்திலும் இப்பெயர் வழக்கத்திலில்லை என்பதும் தமிழர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் இங்கு ஊன்றி நோக்கத் தக்கது.

சரி, தமிழர் மண்ணில் இனியும் வடமொழி வேண்டாமென்றால், அவற்றைத் தமிழ்ப்படுத்திப் பயன்படுத்தலாம். (ஒரு ஒளிப்படத்தில் “விரோதி வருடம்” (2009ஃ2010) அழகுதமிழில் “தீர்பகை ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது; என்ன அழகான பெயர்!) இல்லாவிட்டால், அறுபது வருடக் கணக்கே வேண்டாமென்றும் விட்டு விடலாம். ஆனால் அதற்காக, காலம்காலமாக தமிழர்கள் கொண்டாடிய சித்திரைப்புத்தாண்டையே கைவிடவேண்டும் என்பது சுத்த முட்டாள்த்தனமாகத் தென்படவில்லை?

4.தமிழர் புத்தாண்டு எல்லா மதத்தவரும் கொண்டாடுவதாக இருக்கவேண்டும். சனாதன நெறியாளர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக இருக்கக் கூடாது! மதம்சார்ந்த சித்திரைப்புத்தாண்டை நாங்கள் எதிர்க்கவில்லை; அதை சனாதனர்கள் கொண்டாடி விட்டுப்போகட்டும்; ஆனால், தமிழர்கள் எல்லோரும் தைப்புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்!

(“ஹிந்து” என்ற பதம் தற்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருவதால், அதற்கு மாற்றாக “சனாதன நெறி” என்ற பதம் இக்கட்டுரை முழுவதும் எடுத்தாளப்படுகிறது.)

தமிழ்ப்புத்தாண்டு மதம் சார்ந்த புத்தாண்டா?

நிச்சயமாக இல்லை! சித்திரைப்புதுவருடம், சனாதனர்கள் (இந்துக்கள்) மட்டும் கொண்டாடும் பண்டிகை அல்லவென்பதை, இத்தகையவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.. தமிழ்ச் சனாதனர்களால் மட்டுமன்றி, தமிழகத்தில் சிறுபான்மையாகவுள்ள தமிழ்ப்பௌத்தர்கள், தமிழ்ச்சமணர்களாலும் இப்புதுவருடம் கொண்டாடப்படுகிறது. அவர்களும் சேர்ந்து கொண்டாடுவதால், கண்ணன் - நாரதர் கதையை பௌத்த சமணர்களும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமா, என்ன?

தமிழரின் புத்தாண்டு, வேனிற்காலத்தை வரவேற்கும் விழா! அவ்வளவுதான்! இதில், கண்ணனுக்கோ நாரதருக்கோ சம்பந்தமில்லை!! தமிழ் பேசும் கிறித்தவ - முசுலீம் சகோதரர்கள் தாராளமாக சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடலாம்! யாரும் அதற்கு தடை சொல்லப் போவதில்லை!

தையைப் புத்தாண்டு ஆக்குவதற்காக, சித்திரைக்கு மதச்சாயம் பூசியது யாரென்று தான், உலகத்துக்கே தெரியுமே! மதம்சார்ந்த சித்திரைப்புத்தாண்டை அவர்கள் எதிர்க்கவில்லையாம் – விட்டுக்கொடுக்கிறார்களாம்...தமிழனின் பண்டிகையை தமிழனுக்கே விட்டுக்கொடுக்க இவர்கள் யார்?

ஏற்கனவே தமிழன் வெட்கமின்றி, இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில், மதப்புத்தாண்டு மொழிப்புத்தாண்டு என்றுவேறு பிரித்து மூன்று புத்தாண்டா?? உருப்பட்டாற் போல்தான்!

இவ்வெல்லா ஆதாரங்களையும் உற்றுநோக்கும்போது, தைப்புத்தாண்டு, தமிழறிஞரால் முடிவு செய்யப்பட்டது; சங்ககாலத்திலிருந்தே கொண்டாடப்பட்டுவந்தது போன்ற வாதங்கள் முற்றாகப் பொய்யானவை என்ற முடிவுக்கே வரமுடிகிறதல்லவா?

சரி, சித்திரை தான் தமிழர் புத்தாண்டு என்பதற்கு என்ன ஆதாரம்??

உண்மையில், தையோ சித்திரையோ, சங்ககாலத்தில் புத்தாண்டு என்று ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை! ஆனால், சிறுபொழுது, பெரும்பொழுது எனக் காலத்தைக் கணித்த முன்னோர்கள், குறிப்பிட்ட மாதத்திலிருந்து தான், 12 மாதக் கணக்கைக் ஆரம்பித்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை! அம்மாதம் எது?

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” -நெடுநல்வாடை. வரி 160 -161

இதன் பொருளை சுருக்கமாகப் பார்த்தால், “வலிமையான கொம்பை உடைய ஆடு (மேடம்) முதலான உடுத்தொகுதிகளின் ஊடாகச் சூரியன் இயங்கும் வான் மண்டலம்” என்பதாகும்.
சூரியன் மேட இராசியில் நிற்கும் மாதம் சித்திரை என்பது யாவரும் ஏற்றுக் கொண்ட ஒன்று தான்! 12 தமிழ் மாதங்களும் சௌரமானத்தில் (சூரியன் சார்ந்து) குறிப்பிடப்படும்போது, மேழம்(மேடம் - சித்திரை), விடை(இடபம் - வைகாசி), ஆடவை(மிதுனம் - ஆனி) என்று 12 தமிழ் இராசிப் பெயர்களிலேயே குறிப்பிடப்படுகின்றன.

சித்திரையே தமிழரின் முதல் மாதம் எனும் நெடுநல்வாடையின் இந்த ஆதாரத்துக்கு பதில் என்ன?? நெடுநல்வாடை பார்ப்பனரால் பாடப்பட்டது - இதுவும் ஒரு ஆரியச் சதி என்று வழக்கமான பல்லவியைப் பாடப்போகிறார்களா??

சங்ககாலத்தில், சித்திரையே முதல்மாதமாகக் கணிக்கப்பட்டது என்பதற்கு நெடுநல்வாடையின் சான்று காட்டியாயிற்று. ஆனால், தை, சித்திரை மாதங்கள் தவிர, இன்னொரு மாதமும் புத்தாண்டு விவாதத்தில் கலந்துகொள்கிறது….

அது ஆவணி!

பழந்தமிழர் ஒரு வருடத்தை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தனர். கார்காலம்(ஆவணி, புரட்டாதி), கூதிர்காலம்(ஐப்பசி,கார்த்திகை), முன்பனிக்காலம்(மார்கழி, தை), பின்பனிக்காலம்(மாசி, பங்குனி), இளவேனிற்காலம்(சித்திரை, வைகாசி), முதுவேனிற்காலம்(ஆனி, ஆடி) என்பன அவை. (அதைக் கூட தமக்கு சார்பாக, மாற்றி, தை மாதமே இளவேனிற்கால தொடக்கம் என்று கூச்சல் போடுகிறது ஒரு கூட்டம்.)

சோழப்பேரரசு காலத்தில் (கி.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகள்) குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆவணியே முதல் தமிழ் மாதமாக இருந்தது என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உண்டு. சோழப்பேரரசு காலத்தில் உருவானவை எனக் கருதப்படும் நிகண்டுகளில் இதற்கான சான்றுகள் உண்டு.

“மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்” -சூடாமணி நிகண்டு,

“ஆவணி முதலா இரண்டி ரண்டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே” - திவாகர நிகண்டு

ஆனால், நீண்ட நாள் கொண்டாடப்பட்டு வந்த வழக்கத்தில் தானோ என்னவோ சித்திரைப் புத்தாண்டே நிலைத்து விட்டது… ஆவணிப் புத்தாண்டு பிரபலமடையவில்லை.

தெளிவான சான்றுகளின் அடிப்படையில் முதல் மாதம் சித்திரையா அல்லது ஆவணியா என்ற வாதம் ஏற்பட்டிருக்கவேண்டுமே தவிர இங்கு தை எங்கிருந்து வந்தது?

இன்னும் அகத்தியர் பன்னீராயிரம், இடைக்காடர் பாடல்கள் முதலான சித்தர் இலக்கியங்கள், கமலை ஞானப்பிரகாசரின் “புட்பவிதி” எனும் நூல், இன்னுஞ் சில கல்வெட்டுச் சாசனங்கள் முதலானவையெல்லாம், சித்திரையே புத்தாண்டு என்பதற்கான ஆதாரத்தை ஐயம் திரிபற சுமந்து நிற்கின்றன.

சித்திரை வருடப்பிறப்பின் புராணக் கதையும், அறுபது வடமொழிப் பெயர்களும் தானே பிரச்சனை? அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு திருவள்ளுவராண்டின் தொடக்கமாக சித்திரை முதல் நாளைக் கொண்டால்தானென்ன?

60 வருடங்களுக்கும் புதிய தமிழ்ப்பெயர்களை சூட்டலாம், இல்லாவிடின் அறுபது வருடக்கணக்கே வேண்டாம் எனலாம். ஆனால், இவற்றை ஆராயாமல், எந்த அடிப்படையுமே இல்லாமல் தையை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது சரிதானா?

தைப்பொங்கல் தமிழர் திருநாள்; எனவே அது மட்டுமே புத்தாண்டாக இருக்கத் தகுதி படைத்தது என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையில் தைப்பொங்கல், தமிழர் மட்டும் கொண்டாடும் பண்டிகையா என்ன?

தெலுங்கர், கன்னடர் - மகர் சங்கிராந்தி
குஜராத்தில் - உத்தராயண்
ஒரிசாவில் - மகர் மேளா
பஞ்சாப், சம்மு, உத்தரப்பிரதேசம் - லோக்ரி பண்டிகை
வங்காளம் - கங்கா சாகர் மேளா
என்று இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகள் எல்லாம் தமிழ் தைப்பொங்கலன்று அல்லது அதைத் தழுவிய நாட்களிலன்றோ (சனவரி 13 அல்லது 14 அல்லது 15) இடம்பெறுகின்றன? இப்படி எத்தனையோ இனத்தவர் சேர்ந்து கொண்டாடும் பண்டிகையைத் தானே இன்று தமிழர் திருநாள் என்கிறோம்!!

தமிழர் மட்டும் கொண்டாடும் பண்டிகை என்றால் கார்த்திகை தீபத்தை ஒருவேளை சொல்லலாம்… (வேண்டாம் வேண்டாம்..பிறகு கார்த்திகைப் புத்தாண்டு கொண்டாடவும் சிலர் ஆயத்தமாவார்கள்…..)

சனவரி மாத முதலாந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இன்றும் கிறித்தவ சகோதரர்கள், சனவரி, பெப்பிரவரி, மார்ச்சு போன்ற ஆங்கில மாதப்பெயர்களுக்கு, தை, மாசி, பங்குனி என்ற தமிழ்மாதப் பெயர்களையே பயன்படுத்துகின்றனர். உண்மையில் தமிழ் மாதங்களுக்கும் ஆங்கில மாதங்களுக்குமிடையில் சுமார் 15 நாட்கள் வித்தியாசமுண்டு!
ஆங்கில மாதங்கள், தமிழ் மாதங்களாகக் காட்டப்பட்ட மாயையில் சிக்கித் தான், ஆங்கிலேயன் கொண்டாடும் சனவரி மாதத்திலேயே தன் புத்தாண்டும் கொண்டாடப்படவேண்டும் என்று விழைந்தானோ “டமிலன்”?

மாறி மாறி ஏற்படும் ஆட்சிமாற்றத்தால், தமிழக மக்கள் புத்தாண்டு விடயத்தில் குழம்புவது போல், ஈழத்தவர்கள் குழப்பமடையவில்லை என்பதில், ஒரு ஈழத்தமிழன் என்ற ரீதியில் பெருமை அடைகிறேன்

கி.பி 1624இல் திருகோணமலை திருக்கோணேச்சரப் பெருமான், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, நகர்வலம் சென்றிருந்தபோதுதான் போர்த்துக்கேயரால் அத்தலம் இடிக்கப்பட்டது என்பது இலங்கை வரலாறு சொல்லும் உண்மை. இச்சான்று மூலம் குறைந்தபட்சம் சுமார் 400 ஆண்டுகளாகவேனும், ஈழத்தில் சித்திரைப் புத்தாண்டு வழக்கத்தில் இருந்து வருகிறது என உறுதிபடக் கூறலாம்.
அத்தகைய ஒரு பண்டிகையை ஆரியச்சாயம் பூசி ஒழிக்க எண்ணுவது, அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால்…

» தை புத்தாண்டு என்பதற்கு எந்த விதமான இலக்கிய சான்றுகளும் இல்லை. அவர்கள், ஆதாரத்துக்கு இழுக்கும் மறைமலையடிகளாலும் தமிழறிஞராலும் கூட, தைப்புத்தாண்டு, என்றுமே முன்மொழியப்படவில்லை.

» தையே புத்தாண்டு என்பதற்கு அவர்கள் முன்வைக்கும் “தைஇத்திங்கள்”, “தைஇய திங்கள்”, “தைநீராடல்” என்ற பதங்கள், வெறுமனே தைமாதத்தைக் குறிப்பிடுகிறதே அன்றி, தை தான் தமிழரது புத்தாண்டு என்று பூடகமாகவேனும் குறிப்பிடவில்லை.

» தை முதனாள் வருடப்பிறப்பானதில், முழுக்க முழுக்க திராவிட வெறியையும் சனாதன நெறி எதிர்ப்பையும் தான் காணமுடிகிறது. தவிர, இது உண்மையான பகுத்தறிவுடன் முடிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

» சித்திரை, ஆவணி என்பன முதல்மாதங்களாகக் கருதப்பட்டன என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு. ஆனால், ஆவணி தவிர்க்கப்பட்டு, இலக்கியச் சான்றே இல்லாத தை, இந்தப் பந்தயத்தில் கலந்துகொண்ட மர்மம் யாருக்கும் புரியவில்லை.

ஆக, தமிழ்ப்புத்தாண்டு சித்திரையே என்பது வெள்ளிடைமலையாகிறது.
தமிழர் புத்தாண்டுக்கு தெளிவு கண்ட இவ்விடத்தில், உலகெங்கிலும் வாழ் தமிழறிஞர் பெருமக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ்ப்புத்தாண்டு தமிழருக்குரியது. வடமொழி 60 பெயர்களையும் தமிழ்ப்படுத்தி பயன்படுத்தலாம். அல்லது, வடமொழி 60 பெயர் வழக்கைத் தவிர்த்து, திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை ஏற்றுக் கொள்ளலாம் - ஆனால், அது சித்திரை 1இல் துவங்குவதாக இருக்கவேண்டும்.
(திருவள்ளுவரின் காலம் கி.மு அல்ல, கி.பி என்ற வாதம் உள்ளமையும் இங்கு நோக்கத் தக்கது.)

இவற்றில் எதை ஏற்றுக் கொள்ளலாம் - எதைத் தவிர்க்கலாம் என்பதை தமிழறிஞர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும்.

இத்தனை ஆதாரங்களும் போதுமென்றே நினைக்கிறேன்… மேலதிக விளக்கங்களுக்கு இவ்விணைப்புகளுக்கு சென்று பாருங்கள்.

http://www.sishri.org/puthandu.html
http://www.lankaweb.com/news/items/2011/01/03/a-tamil-cultural-debate/
http://www.mayyam.com/talk/showthread.php?1013-Significance-of-the-Tamil-New-Year&amp
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/
http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/


இத்தனை ஆதாரங்கள் காட்டப்பட்ட பின்பும், தமிழறிஞர்கள், இனியும் தைப்புத்தாண்டுக்கு ஆதரவு கொடுக்கவேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்;! தைப்புத்தாண்டை தூக்கிவைத்து ஆடுபவர்கள் ஆடட்டும்… நம்மைப் பொறுத்தவரை, தைத்திருநாள் என்றென்றும் தைப்பொங்கல் திருநாள் தான்… புதுவருடம் அதே சித்திரை முதனாள் தான்!!! மாற்றமில்லை…மாற்றவும் தேவையில்லை!

மாற்ற நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே பாவனைக்கு விடும் எதுவும், அவர்களால் இலகுவாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும். வற்புறுத்தியோ அழுத்தம் கொடுத்தோ, புழக்கத்திலிருப்பதை மாற்றியோ அவர்களாக திணிக்கும் எதுவும் மக்கள் மத்தியில் நீண்ட நாள் நிலைக்காது. தற்போது தைப்புத்தாண்டுக்கும் அதுதான் நிகழ்ந்து வருகிறது, இன்றும் பெருமளவு தமிழர்கள் தை முதனாளை தைப்பொங்கலாகவும், சித்திரை முதனாளையே வருடப் பிறப்பாகவும் கொண்டாடுவதை, கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!!

பார்க்கலாம்… இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தான் தைப்புத்தாண்டு ஓலம் கேட்கிறது என்று…!

Monday, 8 April 2013

பெண்கள் கவனிக்க வேண்டிய சில விசயங்கள்

** இந்த பதிவு நமது சமூக பொதுநலம் கருதியே பதிக்கப்பட்டவை, யார் மனதையும் புண் படுத்தும் நோக்கம் அல்ல**

***பெண்கள் கவனிக்க வேண்டிய சில விசயங்கள்****

ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை...
* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.

* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.

இப்போதைய சிறுவயதினர்கள் வெகுளித்தனமாக இருக்கின்றார்கள் அதற்க்காவே இந்த பதிவு.




முதல் பதிப்பு 
கொங்கு வேளாள கவுண்டர் சொந்தங்கள் குழுமம்

Friday, 5 April 2013

விவசாய பொருள்கள் ஏற்றுமதி செய்ய

விவசாய பொருள்கள் ஏற்றுமதி செய்ய உதவி பெற தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இல்லை,தமிழ்நாட்டில் உள்ள மக்கள் உதவி பெற விரும்பினால் கர்நாடக அமைப்பை தான் நாட வேண்டும்.பின் வரும் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)
12/1/1 Palace Cross Road Bangalore 560 020
Phone: 080-23343425/2336827
Fax: 080-23364560
E-Mail: apedablr@vsnl.net
Contact Person: Mr. R Ravindra
Designation: Regional Incharge
City: Banglore
Pin Code: 560020
State: Karnataka
Country: India

Thursday, 4 April 2013

மாநிலத்தில் முதன்முறையாக நாட்டு மாட்டு பொருட்களுக்கென பிரத்யேக கடை

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தீயணைப்பு நிலையம் பேருந்து நிறுத்தம் எதிரே தம்பிரான் மெடிக்கல்ஸ் இல் நாட்டு மாட்டு பால் விற்பனை செய்யபடுகிறது.

இதில் சிறப்பு என்னவென்றால் A2 பால் என்று தரம் பிரித்து விற்கிறார்கள். அதாவது அதன் அறிவியல் பூர்வ நன்மைகளை உணர்ந்து..

கலப்பின சிந்து ஜெர்சி போன்ற பன்றிகளின் பாலை குடிப்பதால் பாலியல் கோளாறுகள், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?
**************************
கொங்கு மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நாட்டு மாடுககள் இழப்பால் ஏற்பட்டவை என்பதும், அவற்றை மீட்பதால் நல்ல விளைவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பதும் நிதர்சனமான உண்மை. ஆச்சரியம் அல்லவா..!

நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது. கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது. பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது. ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது. தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள ஸ்காலரில் தேடி படிக்கவும்.

இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்..?

மேலும் நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். கலப்பின பசுக்களின் பால் தாமச/ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.

இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள். சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் கானும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும்.

முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான். நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.

நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! வீட்டில் வளர்க்க இயலவில்லைஎனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.




நன்றி சசி குமார்


Wednesday, 3 April 2013

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஜனவரி 17 2010ல், "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது. உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !!
எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை, உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?
தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள். அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான். அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும். "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான். "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண‌ லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள்.
அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம். மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?
ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத‌ தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?
நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால், கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.
பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு.
லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ? அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?
கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீன‌வர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?
"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?
இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?
திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. அது ஹிந்துக்களை இனைக்கிறது. ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ? எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?
உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது. இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள். கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.
மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034.
e-mail csmail@startv.com
ceo@starnews.co.in